
அப்பாவி’ படத்தை இயக்கி வருகிறார் ரங்கராஜன். இந்த படத்தின் கதை, இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகும். ‘அதற்காக... ஏதோ அட்வைஸ் பண்ற மாதிரியான கதை என்று நினைத்துவிட வேண்டாம்...’ என்று உஷாராகப் பேசுகிறார் இயக்குநர்.
படத்தில் கே. பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்தக் கேரக்டர் பேசும்படியாக இருக்குமாம். நாயகன் கௌதம் லையோலா கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவனாக வருகிறார். இந்தப் படத்தின் நாயகி, சுஹானி ஏற்கனவே நான்கு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு இப்போது மெல்ல தமிழுக்கு வந்திருக்கிறார். இவர் கவர்ச்சியாக நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியெல்லாம் இவரிடம் கேட்பது அதிகப்பிரசங்கித்தனம் என்றே தெரிகிறது. காரணம், இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தூக்கலான கவர்ச்சி உடையுடனே வந்து கலக்குகிறார்.
நிகழ்ச்சியிலே இப்படி என்றால்... படத்திலும் ஓவரான கவர்ச்சி இருக்கும் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லை.


0 comments:
Post a Comment