
‘ஆயிரத்தில்’ ஒருவன் ஓடுதோ இல்லையோ... கல்லா கட்டுதோ இல்லையோ... அந்தப் படத்தில் நடித்த யாருக்கு பேர் இல்லாவிட்டாலும் ரீமாசென்னுக்கு மட்டும் ஏகப்பட்ட பாராட்டுக்களாம். காரணம், இஷ்டத்துக்கு அம்மணி காட்டிய கவர்ச்சிதானாம். படத்தைப் பார்த்துவிட்டு போனைப் போட்டுப் பேசுகிறவர்களும் நேரில் பார்த்து பாராட்டுகிறவர்களும், இரண்டு விதமாகப் பேசுகிறார்களாம். சிலர் இந்தப் படத்தில் ரீமாவின் கவர்ச்சி சூப்பர் என்றும் சிலர் நடிப்பு அருமையாக உள்ளது என்றும் சொல்ல, பாராட்டுமழையில் குளித்தவண்ணம் இருக்கும் ரீமாசென், அடுத்து எந்த மாதிரியான வேடங்களை ஏற்று நடிப்பது என்று புரியாமல் தவிக்கிறாராம். கிளாமரா? நடிப்பா? என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கும் ரீமா, இப்போதைக்கு எதிர்பார்ப்பதெல்லாம் க்ளாமருடன் நல்ல நடிப்புக்கும் தீனி போடும் கேரக்டர்களைத்தான்.
Friday, January 22, 2010
ரீமாசென்னின் தவிப்பு
Labels:
சினிமா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment