Saturday, June 20, 2009
Thursday, June 18, 2009
Wednesday, June 17, 2009
ரத்ததானம்-ரஜினி ரசிகர்களுக்கு இணையதளம்!
ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.
தமிழகமெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை துவக்கியுள்ளனர்.
www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கியுள்ளனர்.
அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன

வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வந்தால் கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆம்... பல ஏற்ற இறங்கங்களைக் கண்ட தனது நடிப்பு வாழ்க்கையின் பொன்விழா ஆண்டில் இருக்கிறார் கமல் இப்போது.
5 வயது சிறுவனாக "களத்தூர் கண்ணம்மா” மூலம் தமிழில் அறிமுகமானவர் கமல். அதன் பிறகு சிறுவனாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைய, உதவி இயக்குநர், நடன உதவியாளர், ஸ்டன்ட் உதவியாளர் என பல வேலைகளை தனது 20 வயதுக்குள் பார்த்துவிட்டார் கமல். நிறைய நிறைய கற்றுக் கொண்டார்.
அதன் பிறகுதான் பாலச்சந்தரின் பொறுப்பில் வந்தார். துக்கடா வேடங்கள், வில்லன், எதிர்மறை நாயகன் என பல வேடங்கள் போட்டவர், அபூர்வ ராகங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் திரையுலக வரலாற்றுப் பக்கங்களில் நிச்சயம் மறைக்க முடியாத சாதனைகள்தான்.
இப்போது திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறார் கமல்.
இந்த பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புத் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருப்பதுதான் அவரது 'உன்னைப்போல் ஒருவன்'.
ஐஸ்லேண்டில் படமாக்கப்படும் ஆதவன்
உதயநிதி ஸ்டாலின் ‘குருவி’ படத்திற்கு அடுத்தபடியாக பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ஆதவன்.
இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.. இவர்களுடன் சரோஜாதேவி, வடிவேலு போன்றோரும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தற்போது ஐஸ்லேண்டில் நடைபெற்று வருகிறது. ஐஸ்லேண்டில் படம் பிடிக்கப்படும் முதல் தமிழ் படம் இதுதான். சூர்யா - நயன்தாரா பங்கு பெறும் கவிஞர் தாமரை எழுதி தினேஷ் நடனத்தில் ‘ஏனோ ஏனோ பனித்துளி.... தேனோ பாலோ எரியுது எரியுது... தீ போல...’ என்ற பாடல் படமாக்கப்பட்டது. இதற்காக 35 பேர் கொண்ட படக்குழுவினர் ஐஸ்லேண்டிற்கு சென்றுள்ளனர்.
இதற்கு முன்பு ஆங்கிலப் படங்களான ஜேம்ஸ்பாண்ட் நடித்த எ.வியூடுகில், டை அனதர் டே போன்ற படங்கள் தான் ஐஸ் லேண்டில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் வில்லன் ராகுல் தேவ், சாயாஜி ஷிண்டேவுடன் சூர்யா மோதும் காட்சிகள் கல்கத்தா மற்றும் புது டெல்லியின் பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கிடையே படமாக்கப்பட்டன.
Monday, June 15, 2009
விருதுகளை அள்ளிய ஜோதா அக்பர்
மக்காவ் தீவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் படம் விருதுகளை அள்ளியது.
அசுதோஷ் கோவரிகர் இயக்கிய இப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 10 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷன் தேர்வானார். கோவரிகர் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.
அனைத்து விருதுப் பிரிவுகளிலும் ஜோதா அக்பர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதா அக்பர் விருதுகளைக் குவித்தாலும் கூட அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யாவுக்கு விருது கிடைக்கவி்லை. மாறாக, பேஷன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நாயகி விருது கிடைத்தது.
சிறந்த நடிகை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆசின், காத்ரீனா கைப், பிபாஷா பாசு ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

