ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கலைஞரின் பெண் சிங்கம் படப்பிடிப்பு பொள்ளாச்சி, ஒகேனக்கல் திருமூர்த்திமலை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கலைஞரின் ஆவேசமான பஞ்ச் வசனங்கள் பிரமிக்க வைத்துள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கு தகுந்தாற்போல் ஆகா வீணையில் எழுவது வேணுகானமா? என்ற டூயட் பாடலை கலைஞர் பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் அருமையாக வந்துள்ளது.
கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலும் வாலி, வைரமுத்து, பா.விஜய் ஆகியோரின் பாடல்களும் இப்படத்தில் இனிமையாக உள்ளன. நடிகர் உதய்கிரண், மீரா ஜாஸ்மின், விவேக், ராதாரவி, வாகை சந்திரசேகர், ரோகிணி, ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகர் அஜீத்தின் மைத்துனர் ரிச்சட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கொல்கத்தா புதுவரவு சுதர்சனா சென் நடிக்கிறார்.
ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்று சதி வலையை முறியடித்து சாதனை புரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வேடத்தில் மீராஜாஸ்மின் நடிக்கும் இப்படத்தை பாலிஸ்ரீரெங்கம் இயக்குகிறார். ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் சார்பாக ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார்.


0 comments:
Post a Comment