Friday, May 9, 2008

அம்பாறையில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 30 பேர் காயம'

அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து நிலையத்திற்கு அண்மித்து உள்ள பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவர், முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இருப்பினும் "சிற்றி கபே" என்ற தேநீர் விடுதிக்குள்ளேயே குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொதியில் வைக்கப்பட்ட நிலையில் குண்டு வெடித்ததாகவும் அம்பாறையிலிருந்து கிடைக்கும் பின்னைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 30 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அம்பாறை தேசிய மருத்துவமனையின் இயக்குநர் லங்காதிலக்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் இதனை மறுத்துள்ளன.

puthinam

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 5 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு

மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.


சிறிலங்காப் படையினர் கறுக்காய்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.

ஆட்டிலெறிகள்-மோட்டார்கள்-பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் மிகச்செறிவான சூட்டாதரவுடனும் டாங்கிகள், கவச ஊர்திகளின் பீரங்கிச் சூட்டாதரவுடனும் படையினர் இம் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர்.


கைப்பற்றப்பட்ட படையினரின் உடலங்கள்


கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி


கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி

படையினருக்கு ஆதரவாக வான் படையினரின் கிபீர் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 8:00 மணிவரை மிகச்செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு நேரடி முறியடிப்புத்தாக்குதலை சிங்களப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தினர்.

இம் முறியடிப்புத் தாக்குதலையடுத்து காலை 8:00 மணியளவில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர்.


கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி


கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி

இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவு படையினர் காயமடைந்தனர்.

இம் முறியடிப்புத்தாக்குதலில்

படையினரின் உடலங்கள் - 05

நடுத்தர ரவை - 18,000

பிகே ரவை - 14,000

கைக்குண்டு - 40

பிகே இணைப்பி - 850

மழைக்கவசம் - 05

பிகே எல்எம்ஜி - 02

ஏகே எல்எம்ஜி - 03

ரி-56 2 ரக துப்பாக்கி - 04

ஏகே மகசின் - 21

ஏகே ரவை - 340

எல்எம்ஜி லிங்குடன் ரவை - 265

பிகே ரவை - 20

பிகே லிங்கு - 34

கிற் பாக் (ஜக்கட்) - 14

தலைக்கவசம் - 04

ரவை துளைக்காத ஜக்கட் - 03

ஏகே எல்எம்ஜி றம் - 02

50 கலிபர் ரவைப் பெட்டி - 02

பிகே பெட்டி - 02

தண்ணீர் கொள்கலன் - 20

இராணுவச் சப்பாத்து - 05

மற்றும் பெருமளவிலான படைக்கலங்கள், வெடிபொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

படையினரின் படைக்காவி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வண்ணம் பின்னோக்கி படையினரால் இழுத்துச் செல்லப்பட்டது.

puthinam

ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை

தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 32 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிறிலங்காப் படையினர் நடத்திய வான் குண்டுத்தாக்குதல்கள், எறிகணை வீச்சு மற்றும் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் தேவாலயத்துக்கு அருகாமைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் காணாமல் போனோர் எண்ணிக்கை இதனில் இணைக்கப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthanam

ஊடகங்களுக்கு இராணுவத்தினர் தகவல்கள் தெரிவிக்கக்கூடாது: சுற்றிக்கை மூலம் அறிவித்தல்

சிறிலங்காப் படை நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்ற புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று களமுனைகளில் உள்ள படை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இராணுவத்தின் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இந்த சிறப்பு அறிவித்தலை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேககா பிராந்திய தளபதிகளின் ஊடாக அனுப்பியுள்ளார்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இராணுவத்தில் இருந்து தகவல் கொடுப்போர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் நேரடியாக ஈடுபடுவோர் மற்றும் நேரடியற்ற முறையில் தகவல் கொடுப்போர் போன்றவர்கள் அடங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அண்மையில் முகமாலையில் நடைபெற்ற பெரும் சமர் தொடர்பான தகவல்களை பல ஊடகங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுப்படை நடவடிக்கை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி டொனால்ட் பெரேரா இராணுவத்தின் உணர்திறன் மிக்க தகவல்கள் எவ்வாறு ஊடகங்களை சென்றடைகின்றன எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இராணுவத்தின் புலனாய்வுத்துறையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று ஊடகத்துறையை எவ்வாறு சென்றடைந்தது எனவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது.

முன்னரும் பல தடவைகள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என இராணுவத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

puthinam

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி: கொழும்பு ஊடகம்

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடபில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்புக்கள், ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் அரசு மேலதிக படைத்துறைப் பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

படைத்துறை கொள்வனவுகள் தொடர்பான பேச்சுக்களும் வெற்றியளித்துள்ளன. பாகிஸ்தான் இராணுவத்தின் கூட்டுப்படைத் தலைமைப் பணிப்பாளர் ஜெனரல் ரறிக் மஜீட் சிறிலங்காப் படைத்துறைக்கான பயிற்சி ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானின் ஆயுத நிறுவனங்களுக்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா, அவற்றினைப் பார்வையிட்டுள்ளதுடன் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி லெப். ஜெனரல் சயீட் சபாகட் கூசேனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தப் பயணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எல்.ஏ.டி.அமரதுங்க, பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் குறுப் கப்டன் அஜந்த டி சில்வா, சரத் பொன்சேகாவின் இராணுவ உதவியாளர் லெப். கேணல் ஆர் விஜயசுந்தர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

சிறிலங்கா அரசிற்கு இராணுவ உதவிகளை வழங்கி வரும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஏனைய இரு நாடுகள் இந்தியா, சீனா ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam

சிறிலங்காப் படையினரின் இரும்புக்கரங்களுக்குள் மன்னார் மக்கள்: "த மோர்ணிங்க் லீடர்"

மன்னார் மக்கள் படையினரின் இரும்புக்கரங்கள் கொண்ட கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொழும்பைச் சேர்ந்த மதத் தலைவர்கள் சிலர் கடந்த மாதம் ஏப்ரல் 15 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரையில் மன்னாருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.

மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மதத் தலைவர்கள் குழுவில் மூத்த பௌத்த பிக்கு ஒருவரும், அங்கிலிக்கன், கத்தோலிக்க, மெதடிஸ்த மதகுருமார்களும் உள்ளடங்கியிருந்தனர்.

மன்னாருக்குப் பயணம் செய்த மதத் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் கடுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. மன்னார் வீதியின் ஊடாக பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்துப் பயணிகளும் மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் பதிவும் செய்யப்படுகின்றனர்.

மன்னார் ஊடாக ஏ-30 வவுனியா வீதி மற்றும் ஏ-14 மதவாச்சி வீதி ஊடாகப் பயணிக்கும் பயணிகள் இந்தக் கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மன்னார் வீதியின் பல இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மன்னாரிலிருந்து மதவாச்சி செல்வதற்கிடையில் எமது வாகனம் 6 இடங்களில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எமது வாகனம் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

எனினும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மிகவும் கடுமையாக சோதிக்கப்படுவதனை நாம் நோக்கக்கூடியதாக இருந்தது. சில மீற்றர்கள் முதல் அரை கிலோ மீற்றர் வரை பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணப் பொதிகளைச் சுமந்தபடி சோதனைச் சாவடியில் காத்திருந்த பயணிகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

மன்னார் நகரில் பாரியளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம்.

மதவாச்சி வீதியைப் பாவிப்பது தொடர்பிலான கட்டுப்பாடுகள்

இந்த வருட ஆரம்பம் முதல் கொழும்பிலிருந்து மன்னாருக்குச் செல்லும் வாகனங்கள் மதவாச்சி ஊடாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து வெளிச்செல்லும் வாகனங்களும் மதவாச்சி ஊடாக செல்வதற்கும் படையினர் அனுமதியளிப்பதில்லை.

பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

எனவே, தொடருந்து மூலம் சென்று, நண்பர்களிடம் போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்யுமாறு கோர பயணிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமை வயோதிபர்கள், அங்கவீனர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்வோருக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் தொண்டு நிறுவனங்களும் இந்தப் போக்குவரத்து விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.

மன்னார் பிரதேசவாசிகளைத் தவிர்ந்த எவரும் உட்பிரவேசிக்க முடியாது

கடந்த மாதம் ஏப்ரல் 15 ஆம் நாள் நாம் மன்னார் செல்லும் வழியில் ஓர் மனிதாபிமான தன்னார்வத் தொண்டரைச் சந்தித்தோம். செட்டிக்குளத்தில் வசிக்கும் அவருக்கு மன்னாருக்குச் செல்ல படையினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை. குறித்த தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர் காட்டு அடம்பன் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததனை நாம் அவதானித்தோம்.

எவ்விதமான அறிவித்தல்களும் இன்றி இவ்வாறான தடைகள் திடீரென விதிக்கப்படுகின்றன.

மன்னாரில் வசிப்போரைத் (தேசிய அடையாள அட்டையில் வசிப்பிடம் மன்னார் எனக் குறிப்பிடப்பட்டிருப்போர்) தவிர ஏனையோர் காட்டு அடம்பன் சோதனைச் சாவடிக்கு அப்பால் செல்ல முடியாது எனப் படையினர் குறிப்பிட்டனர்.

கத்தரிவெயிலில் எந்தவித நிழலும் இன்றி சுமார் இரண்டு மணி நேரம் பல்வேறு தரப்பினருக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி அனுமதிப் பெற்றுக்கொள்ள நேரிட்டது.

மன்னாரில் உள்ள தனது கணவரிடம் செல்ல முடியாது தவித்த ஒரு பெண்ணை நாம் செல்லும் வழியில் சந்தித்தோம். அது மட்டுமன்றி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் மன்னார் திரும்பிய பலர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், மாவட்டத்தின் மத்திய மையமாக மன்னார் நகர் கருதப்படுகின்றது. எனவே தொழில் நிமித்தமும், இன்னொரென்ன தேவைகளுக்காகவும் பலர் மன்னார் நகருக்கு நாளாந்தம் வருகை தருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

மதவாச்சி- மன்னார் வீதியில் இவ்வாறு பலர் தமது சொந்தங்களுக்காக காத்திருக்கும் காட்சிகளையும், அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் காட்சிகளையும் எம்மால் கண்கூடாக அவதானிக்க முடிந்தது.

சோதனைச் சாவடியில் கடமையாற்றும் அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அமையவே தமது பணிகளை முன்னெடுப்பதாகவும், இதனால் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக வருந்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு வன்னிப் பிரதேச மக்கள் படகுகள் மூலம் மன்னாருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஆரம்ப காலத்தில் படைத்தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அனுமதிக்கப்படுவர். சில இளைஞர்கள் மேலதிக விசாரணைளுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த அனைத்து மக்களும் களிமோட்டைப் பிரதேசத்தில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

அநேகமானோர் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்க அனுமதி கோரிய போதிலும் படையினர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் என்ன வகையான அணுகுமுறையைப் பின்பற்றுவது என்பது குறித்து படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இராணுவ உயர் அதிகாரிகள் அல்லது பாதுகாப்புச் செயலாளரின் கட்டளைகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதவாச்சி ஊடாகப் பயணம் செய்யும் போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் மதவாச்சிப் பாதை ஊடாகப் பயணம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தொடருந்து மூலமாக மாத்திரமே தமிழர்கள் பயணம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாம்புகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாம் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு பாம்பை அடிப்பதை அவதானித்தோம். தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை வழங்கியுள்ள போதிலும் தங்கியிருப்போர் கூடாரம் மற்றும் ஏனைய வசதிகளின்றி அல்லலுறுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவ வசதிகளின்றி அவதிப்படுவதனை நாம் காணக்கூடியதாக இருந்தது. உண்மையில் அவரைப் பராமரிப்பதற்கு மன்னாரில் பல உறவினர்கள் தயாராக உள்ள போதிலும் படையினரின் போக்குவரத்துக் கெடுபிடிகளின் காரணமாக குறித்த கர்ப்பிணிப் பெண் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றார்.

மேலும், வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் சிறுவன் ஒருவன் கொழும்பு செல்ல முடியாது தவிப்பதனையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

படையினரின் போக்குவரத்துக் கெடுபிடிகளின் காரணமாக உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர முடியாத நிலையில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

ஒரு மணப்பெண் தனது சொந்த திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமையையும் காண நேரிட்டது.

ஆசிரியர்கள், அரசாங்கப் பணியாளர்கள் தமது சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும், விவசாயிகள் மற்றும் கடல் தொழிலாளர்கள் தமது நாளாந்த உயிர் வாழ்தலுக்கான தொழிலைத் தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் பலர் அரசாங்கத்தின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டனர். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமூகமான வாழ்க்கையை தொடர முடியும் என்ற எண்ணத்தில் வன்னியிலிருந்து வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இவ்வாறு ஒரு முகாமில் தடுத்து வைக்கும் என்று தெரிந்திருந்தால் ஒருபோதும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகைத் தந்திருக்க மாட்டோம் என சிலர் எம்மிடம் தெரிவித்தனர்.

முசலிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தோர்

நானாட்டானில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமிற்கும் நாம் பயணம் செய்தோம். எனினும், களிமோட்டை முகாமைப் போன்றல்லாது இங்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன. இதனால் எம்மால் அங்கு தங்கியிருக்கும் மக்களுடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

படையினர் முசலிப் பிரதேசத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின்போது 4,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது படைத்தரப்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத அதேவேளை 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சில நாட்களின் பின்னர் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியும் எனப் படையினர் தெரிவித்திருந்த போதிலும் 7 மாதங்களாகியும் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடித் தொழில்

மன்னாரில் மீன்பிடித் தொழில் மிகவும் பிரபல்யமான தொழிலாகக் கருதப்படுகின்றது.

பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த கடல் தொழிலாளர்களை நாம் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது. மீன் பிடித்தொழிலுக்கு மிகவும் உசிதமான இரவு நேர மீன்பிடித் தடை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பிரதேச கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருவதாக அவர்கள் எம்மிடம் முறையிட்டனர்.

மீனவர்களின் இயந்திரங்களை மாலை 6:00 மணிக்குப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், பின்னர் காலையில் படையினரிடமிருந்து குறித்த இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 15 குதிரை வலுவுடைய படகுகளையே மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறிய சில கடல் தொழிலாளர்களை படையினர் தாக்கியதாகவும் எமக்கு தெரிய வந்தது.

விடுமுறைக்குச் செல்லும் கடற்படையினர் மற்றும் முகாம் பாவனைக்காக கடல் தொழிலாளர்களின் சிறந்த ரக மீன்களை பணம் கொடுக்காது படையினரும் எடுத்துச் செல்வதாகவும் தெரியவருகிறது.

கடற்படையினரின் உத்தரவிற்கு அமைய காலை நேரத்தில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதினால் குறைந்தளவு மீன்களையே பிடிக்க முடிவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதவாச்சி ஊடான போக்குவரத்து கெடுபிடிகள் காரணமாக பிடித்த மீன்களை சந்தைப்படுத்துவதிலும் மன்னார், பேசாலை மீனவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு சிறிலங்காவை தெரிவு செய்ய மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு சிறிலங்காவை தெரிவு செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கடிதம் அனுப்பியுள்ளன.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித உரிமைகள் சபையில் இடம்பெறும் நாடுகள் உயரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா. சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவிற்கு அத்தகைய தகுதிகள் இல்லை.

அரசாங்கம் அல்லாத ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அதே நேரத்தில் சிறிலங்கா அரச படைகளின் உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது.

பாரிய அளவிலான பல்வேறு மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரச படைகள் நேரடியாக ஈடுபட்டுள்ள போதும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபை மற்றும் அதன் கட்டமைப்புகளுக்கு சிறிலங்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், ஐ.நா. உயர் பிரதிநிதிகளான அலன் றொக், ஜோன் ஹோல்ம்ஸ் ஆகியோரை சிறிலங்காத் தரப்பினர் தனிப்பட்ட முறையில் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் அவர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவுவோர் என்றும் சிறிலங்காத் தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.

சிறிலங்காவை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு மீளவும் தெரிவு செய்வதானது இலங்கையின் நடைபெற்று வரும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அனைத்துலக சமூகம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என்பதையே வெளிப்படுத்தும்.

ஆகையால் ஐ.நா. உறுப்பு நாடுகள் இதனை கவனத்தில் கொண்டு இலங்கையின் பாரிய மீறல் விடயங்களில் புதிய கவனம் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, சரத்து 19 மற்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகிய அனைத்துலக உரிமைகள் அமைப்புக்களின் சார்பில் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

4 மாத காலப்பகுதியில் 385 படையினர் பலி- 2,965 படையினர் காயம்: சிறிலங்கா அரச தகவல்கள்

சிறிலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களின் பிரகாரம் கடந்த 4 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,965 படையினர் காயமடைந்துள்ளனர்.

அந்த வகையில் இந்த 4 மாத காலப்பகுதியில் மொத்தம் 3,350 படையினரை களமுனை இழந்துள்ளது.

எனினும் சிறிலங்கா அரச படையினருக்கு ஏற்பட்ட பெருமளவிலான இழப்புக்களை மறைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வட போரரங்கில் கடந்த மாதம் 23 ஆம் நாள் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

கொழும்பில் உள்ள மலர்ச்சாலைகளுக்கு 176 படையினரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இருப்பினும் கடந்த மாதம் 121 படையினர் மட்டுமே உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

puthinam

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையைப் பெற ரணில் பிரசல்ஸ் பயணம்

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி தொழிலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பிரசெல்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

1977 ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஆடைக் கைத்தொழில்துறை தொடங்கப்பட்டது.

சுமார் 200 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்ததுடன் உள்நாட்டு உற்பத்தியும் பெருகியது.

ஒழுங்காக ஆடை அணிய முடியாதிருந்த சிறிலங்காவினர், அனைத்துலகத்திற்காக ஆடைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.

மேலும் அனைத்துலக சந்தைகளுக்குள் சிறிலங்கா இலகுவாக நுழையவும் முடிந்தது.

2002 ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட சமாதான நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிறிலங்காவிடமிருந்து சலுகை அடிப்படையில் தைத்த ஆடைகளை இறக்குமதி செய்ய உடன்பட்டன.

இதனையடுத்து உள்ளுர் உற்பத்திகள் மேலும் அதிகரித்தன.

சமாதான நடவடிக்கையால் தைத்த ஆடைக் கைத்தொழிலை இழுத்து மூடாதிருக்கும் நிலையும், வேலையற்றோர் வீதத்தை அதிகரிக்காதிருக்கும் நிலையும் உருவானது.

அத்துடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதால் சிறிலங்காவின் ஏனைய உற்பத்திப் பொருட்களுக்கும் அனைத்துலக சந்தை வாய்ப்புக் கிடைத்தது.

அனைத்துலக சந்தை வாய்ப்பை உருவாக்கும் கோட்டா அடிப்படையிலான சிறிலங்காவின் ஒப்பந்தம் எதிர்வரும் நவம்பருடன் முடிவடைகின்றது.

எனவே அந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2007 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தைத்த ஆடைகள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த நிலை நீடிக்க வேண்டும். இதற்காக பிரசல்ஸ் சென்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன்.

ஆனால் மனித உரிமைகள் குறித்த அனைத்துலகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இந்த அரசாங்கம்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.

puthinam

வவுனியாவில் 2 பொதுமக்கள் சுட்டுப் படுகொலை

வவுனியாவில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவினால் பொதுமக்கள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா செக்கடிப்பிலவு என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை காலை சின்னத்தம்பி பாஸ்கரன் (வயது 63) என்ற வர்த்தகர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

முச்சக்கர வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் இப்படுகொலையைச் செய்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்திய நீதிபதி, சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் துணைப்படைக் குழுவினால் சிறி என்பவரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே வவுனியாவில் நேற்று முன்நாள் புளொட் உறுப்பினர் பவான் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

புளொட் பவான் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் துணைப்படைக் குழுவான ஈ.பி.டி.பி.யினரும் சிறிலங்காப் படையினரும் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

பவானை சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்கள் சென்ற முச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளான போது அதில் இருந்த ஈ.பி.டி.பி. துணைப்படைக்குழுவினரை பூந்தோட்டம் பகுதி மக்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

puthinam

கிழக்குத் தேர்தல் பணியில் 30,000-க்கும் அதிகமான படையினர்

மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கிழக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முக்கிய வீதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

சிறிலங்கா காவல்துறையினர், அதிரடிப் படையினர், படையினர் என 30,000-க்கும் அதிகமான பாதுகாப்புத் தரப்பினர் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

அதேநேரம் தேர்தல் நேரம் ஏதேனும் குழு அல்லது தனிநபர் சுமூகமான வாக்களிப்புக்கு குழப்பம் விளைவிக்க நேர்ந்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







படங்கள்: ரொய்ட்டர்ஸ்

Thursday, May 8, 2008

"கிழக்கின் விடியல்" பேரில் 300-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சந்திரநேரு சந்திரகாந்தன்

கிழக்கில் வாழும் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் "கிழக்கின் விடியல்" என்ற போர்வையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கற்பனை உலகில் சஞ்சரிக்கும் இந்த அரசாங்கம் போலியானதொரு தேர்தலை நடாத்தி வெளி உலகிற்கு தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளத் துடிக்கின்றது.

இப்போது உள்ள சூழ்நிலையில் கிழக்கில் ஜனநாயக முறையிலான தேர்தல் ஒன்றை நடாத்த முடியாதென தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவருமே ஒருமித்து கூறியிருந்தனர்.

அது மட்டுமன்றி மூவின மக்களின் முக்கிய பெரும் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி என்பனவும் அரசின் இம் முடிவை ஆரம்பத்தில் எதிர்த்திருந்தன.

கிழக்கின் இப்போதைய சூழலில் கட்சிகளோ அன்றி அரசியல் தலைவர்களோ சுயாதீனமாக தேர்தல் பணிகளைச் செய்ய முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தேர்தல் தொகுதிகளுக்குச் செல்ல முடியாது. தமது மாவட்டத்தில் அலுவலகங்களை இயக்க முடியாது.

வீதியோரங்களில் அரசின் ஆசீர்வாதத்துடன் ஆயுதக் குழுக்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுற்றி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின&