Tuesday, June 3, 2008

கந்தானவில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

சிறிலங்காவின் கம்பஹா மாவட்டம் கந்தானவில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்படாத இந்த சடலங்கள் இரண்டும் சுமார் 20 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்களுடையது என்று கந்தான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் இரண்டிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

நான்கு நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே கந்தான சதுப்பு நிலப்பகுதியில் இருந்து இந்த சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இச்சடலங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கொழும்பை அண்மித்துள்ள கந்தானவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுடையதாக சடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இதற்கு முன்னர் வத்தளை பமுனுகம பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களிலிருந்தும் அடையாளம் தெரியாத சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

0 comments: