யாழ்ப்பாணம் குருநகரில் இன்று முற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து கொழும்புத்துறை முதல் பாசையூர் வரையான கரையோரப் பகுதிகளில் திடீர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குருநகரைச் சேர்ந்த பற்றிக் வின்சன் (வயது 23) என்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.
குருநகர் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் ஈருளியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருவர் இவரை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிபதி சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவத்தையடுத்து இன்று பிற்பகல் 3:00 மணியளவில் தமது வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு கரையோரப் பகுதிகளுக்கு சென்ற படையினர் இன்று மாலை 5 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகத் அறிவித்துள்ளனர்.
கொழும்புத்துறை, குருநகர், பாசையூர், மணியம் தோட்டம், கொய்யாத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலால் யாழ். நகரப்பகுதி நேற்று பிற்பகலுடன் வெறிச்சோடியது. கரையோரப் பகுதி மக்களிடையே பதற்றமான நிலை நிலவுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அறிவித்தலையடுத்து கரையோரப் பகுதிகளில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment