மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையடுத்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்றைய நாள் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்முறைகள் இடம்பெற்றன. இதனால் அச்சமுற்ற இப்பகுதியில் உள்ள எல்லைப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
எனினும் கடந்த வியாழக்கிழமை இவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருந்தனர்.
இந்நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதனையடுத்து மீண்டும் இப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் எல்லைக்கிராம மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மக்கள் இடம்பெயர்வதனையடுத்து அப்பகுதிகளில் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டதனைக் கண்டித்து காத்தான்குடியில் இன்று முழுநாள் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடையடைப்பை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களும் இயங்கவில்லை. போக்குவரத்து சிறியளவிலேயே இடம்பெற்றது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment