Wednesday, June 11, 2008

மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் வெட்டிக்கொலை

மன்னார் எமில் நகரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

இராசு காந்தன் என்று அழைக்கப்படும் சுரேஸ் அல்லது காந்தன் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளராக செயற்பட்டு வந்த இவர், சுற்றிவளைப்புக்களின் போது காட்டிக்கொடுப்பது உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

அதிகளவிலான மக்கள் இவரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களால் இவர் வெட்டிக்கொல்லப்பட்டு எமில் நகர் குளத்துக்குள் போடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

puthinam



0 comments: