வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாக சிறிலங்காவிற்குச் செல்வதற்கு சிறிலங்காப் படைத்தரப்பினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியில் இருந்து இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து சிறிலங்காவின் தென்பகுதி நோக்கிச் செல்பவர்களின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறிலங்காப் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்கி பேருந்துகளிலோ அல்லது தொடருந்திலோ தமிழ் மக்கள் செல்லமுடியாது எனவும், இது தற்காலிக நடவடிக்கையே என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலைமையை அடுத்து, வவுனியாவில் இருந்து மதவாச்சிக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வவுனியா மக்கள் போக்குவரத்துச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment