சிறிலங்காவின் புத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்நாள் வெள்ளை வான் ஆயுததாரிகளால் மதபோதகர் ஒருவர் உட்பட நால்வர் கடத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் கருவலகஸ்வெவ என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்த மதபோதகரான கந்தையா சிவகுமாரனும் அவரது உதவியாளரான மாரியப்பன் குவனேஸ்வரனும் வெள்ளை வானில் வந்தவர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் என்ன காரணத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரவில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை புத்தளம் 4 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 2:30 மணியளவில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வாகனச் சாரதியான இராமலிங்கம் சுதாகரன், தொழில்நுட்பவியலாளரான தே.நிசாந்தன் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர் என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment