மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறை கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:15 மணியளவில் ஆற்றில் குளிக்கச் சென்றுகொண்டிருந்த போது இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் எஸ்.எச்.சந்தான, பி.எம்.சமீர மற்றும் ரி.இந்திக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த கே.அமில என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற பகுதியானது ஆயித்தியமலை காவல்துறையினரின் காவலரணிலிருந்து 400 மீற்றர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
Tuesday, June 24, 2008
மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல்: 3 காவல்துறையினர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment