மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடுமையான தாக்குதலில் 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரில் பழுகாமத்தைச் சேர்ந்த சிவராஜா இராஜேந்திரன் (வயது 22) என்ற இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 25 வயதுடைய மற்றைய இளைஞர் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இருவரும் குடும்பஸ்தவர்கள் எனவும் கட்டடத் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகின்றது.
களுதாவளை நாகதம்பிரான் ஆலய உற்சவ நிகழ்வு நடைபெற்ற வேளையில் கிளைமோர்த் தாக்குதல் நடைபெற்றது.
இதில் 2 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்தே சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்த படையினர், வீடு வீடாக தேடுதல் நடத்தி பொதுமக்களை மிகக்கடுமையாகத் தாக்கியதாகவும் 100-க்கும் அதிகமானோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் தொவிக்கப்பட்டது.
நன்றி: புதினம்
Monday, June 23, 2008
களுவாஞ்சிக்குடியில் சிறிலங்காப் படையினரால் 2 குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை- 10 பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment