Saturday, May 31, 2008

இந்தியாவுக்கு கிழக்குப் பிரதேச பகுதிகள் தாரை வார்க்கப்படுகின்றன: அனுரகுமார திசநாயக்க

இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை பகுதிகள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

கிழக்குப் பிரதேச பகுதிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாட்டின் உள் அரசியலில் தலையிடுவதன் மூலமாக புவியியல் மற்றும் பொருளியல் நலன் வாய்ந்த கிழக்குப் பிரதேச பகுதிகளின் மூலம் பயனடைய இந்தியா முயற்சிக்கிறது.

நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சினீத் தொழிற்சாலை பகுதி ஆகியவை இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட உள்ளன.

சம்பூரில் இந்தியா சார்பில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆனால் சம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த 5,000-க்கும் அதிகமான மக்கள் திருகோணமலையில் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

சம்பூரை இந்தியாவுக்கு தாரை வார்ப்பதால் அப்பகுதி மக்களை மீள்குடியேற மகிந்த அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன மோதல்களை உருவாக்குவதற்கு மகிந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

கிழக்குப் பிரதேச தேர்தலே இந்தியாவின் அறிவுறுத்தலின் கீழ் நடத்தப்பட்டதுதான். அங்கே நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படவில்லை என்றார் அவர்.

நன்றி: புதினம்

0 comments: