Saturday, May 31, 2008

சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தலால் தொழிலை கைவிட்டு கரை சேர்ந்த கடற்றொழிலாளர்கள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தூண்டில் தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

இதனால் கடற்றொழிலாளர்கள் தூண்டில் தொழிலை கைவிட்டு விட்டு கரை சேர்ந்தனர்.

உடுத்துறையைச் சேர்ந்த குரு என்பவரது 200 தூண்டில்கள் கடலில் வெட்டப்பட்ட நிலையில் மீன்பிடிப் படகு குறுகிய இடைவெளியில் கரை சேர்ந்துள்ளது.

இந்தக் கடற்பரப்பில் சிறிலங்கா வான்படைக்குரிய எம்ஜ-24 ரக உலங்குவானூர்தி இன்று சனிக்கிழமை காலை 7:00 மணிமுதல் 10:00 மணிவரை பறப்பில் ஈடுபட்டன.

5-க்கும் அதிகமான டோறா பீரங்கி கலங்கள் நாகர்கோவிலுக்கும் வெற்றிலைக்கேணி வரை தொடர்ச்சியான சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டன.

சிறிலங்கா வான் படையின் வேவு வானூர்தி கடற்பகுதியில் முற்பகல் 11:00 மணி தொடர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

துறையில் இருந்து கடலை நோக்கி மீன்பிடிப் படகுகளை இலக்கு வைத்தும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்தும் சிறிலங்காப் படைகள் எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளன.

இதனால் கடலில் கைவிடப்பட்ட மீன்பிடித்தூண்டில் உபகரணங்களை கடற்றொழிலாளர்கள் தேடிச்செல்ல இயலாமல் கைவிட்டதுடன் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

10-க்கும் அதிகமான கடற்றொழிலாளர்களின் படகுகள் தூண்டில் தொழிலை கைவிட்டு கரை சேர்ந்தார்கள்.

நன்றி: புதினம்

0 comments: