இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழுவில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவையும் இணைத்துக்கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
அடுத்த வாரம் நடைபெற உள்ள சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழு கூட்டத்துக்கு பிரதிநிதியை அனுப்புமாறு பிள்ளையானுக்கு மகிந்த தகவல் அனுப்பியுள்ளார்.
அனைத்து கட்சிக்குழுவில் தமது குழுவையும் இணைக்க வேண்டும் என்று கிழக்குத் தேர்தலுக்கு முன்பாக மகிந்தவுக்கு பிள்ளையான் நிபந்தனை விதித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழுவில் மற்றொரு துணைப்படையான டக்ளசின் ஈ.பி.டி.பி. ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment