சிறிலங்காவின் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தி அரசியலமைப்பு சபையை நிறுவிடவும் சுயாதீன ஆணைக்குழு செயற்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்த தடைவிதித்தும் தேர்தல் ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அடுத்த வாரம் தலைமை நீதிமன்றத்தினை நாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுவை செயற்படுத்தும் வரை இந்நாட்டில் சுதந்திரமான, நேர்மையான, பக்கச்சார்பற்ற தேர்தல் நடைபெறாது என்று சுட்டிக்காட்டிய திஸ்ஸ அத்தநாயக்க, தேர்தல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு போதியளவு அதிகாரமோ நிர்வாக கட்டமைப்போ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment