
‘ஆயிரத்தில்’ ஒருவன் ஓடுதோ இல்லையோ... கல்லா கட்டுதோ இல்லையோ... அந்தப் படத்தில் நடித்த யாருக்கு பேர் இல்லாவிட்டாலும் ரீமாசென்னுக்கு மட்டும் ஏகப்பட்ட பாராட்டுக்களாம். காரணம், இஷ்டத்துக்கு அம்மணி காட்டிய கவர்ச்சிதானாம். படத்தைப் பார்த்துவிட்டு போனைப் போட்டுப் பேசுகிறவர்களும் நேரில் பார்த்து பாராட்டுகிறவர்களும், இரண்டு விதமாகப் பேசுகிறார்களாம். சிலர் இந்தப் படத்தில் ரீமாவின் கவர்ச்சி சூப்பர் என்றும் சிலர் நடிப்பு அருமையாக உள்ளது என்றும் சொல்ல, பாராட்டுமழையில் குளித்தவண்ணம் இருக்கும் ரீமாசென், அடுத்து எந்த மாதிரியான வேடங்களை ஏற்று நடிப்பது என்று புரியாமல் தவிக்கிறாராம். கிளாமரா? நடிப்பா? என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கும் ரீமா, இப்போதைக்கு எதிர்பார்ப்பதெல்லாம் க்ளாமருடன் நல்ல நடிப்புக்கும் தீனி போடும் கேரக்டர்களைத்தான்.
Friday, January 22, 2010
ரீமாசென்னின் தவிப்பு
கவர்ச்சி புயல் ‘அப்பாவி’ நாயகி

அப்பாவி’ படத்தை இயக்கி வருகிறார் ரங்கராஜன். இந்த படத்தின் கதை, இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகும். ‘அதற்காக... ஏதோ அட்வைஸ் பண்ற மாதிரியான கதை என்று நினைத்துவிட வேண்டாம்...’ என்று உஷாராகப் பேசுகிறார் இயக்குநர்.
படத்தில் கே. பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்தக் கேரக்டர் பேசும்படியாக இருக்குமாம். நாயகன் கௌதம் லையோலா கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவனாக வருகிறார். இந்தப் படத்தின் நாயகி, சுஹானி ஏற்கனவே நான்கு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு இப்போது மெல்ல தமிழுக்கு வந்திருக்கிறார். இவர் கவர்ச்சியாக நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியெல்லாம் இவரிடம் கேட்பது அதிகப்பிரசங்கித்தனம் என்றே தெரிகிறது. காரணம், இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தூக்கலான கவர்ச்சி உடையுடனே வந்து கலக்குகிறார்.
நிகழ்ச்சியிலே இப்படி என்றால்... படத்திலும் ஓவரான கவர்ச்சி இருக்கும் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லை.
அசல், ஜக்குபாய், கோவா, பையா, இரும்புக்கோட்டை 5 படங்கள் ரிலீசுக்கு தயார்

பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன், குட்டி, நாணயம், போர்க்களம் ஆகிய 4 படங்கள் ரிலீசாயின. அடுத்து அசல், ஜக்குபாய், கோவா, பையா, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் ஆகிய மேலும் 5 புது படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
கோவா படம் வருகிற 29-ந்தேதி ரிலீசாகிறது. அதே நாளில் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் படமும் வருகிறது. கோவா படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.
இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம் படத்தை சிம்புத்தேவன் இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜக்குபாய் படமும் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.
அஜீத்தின் அசல் படம் பிப்ரவரி 5-ந்தேதி திரைக்கு வருகிறது. சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்த “பையா” படம் பிப்ரவரி 2-வது வாரத்தில் ரிலீஸ் ஆகிறது. லிங்குசாமி இயக்கியுள்ளார்.
கேமராவும் கையுமாக சிம்பு

கோ படத்தில் ஒரு பிரபலமான பத்திரிக்கையின் போட்டோ கிராஃபர் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. சாதாரண பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் அரசியலில் நுழைந்து எப்படி கலக்குகிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது கோ படக்கதை.
அதிரடியான சண்டைக் காட்சிகள் படத்தில் உண்டு என்றாலும், கதை காமெடியாகவே நகருமாம். போட்டோ கிராஃபர் வேடம் என்பதால் தனக்கு நெருக்கமான நிஜ போட்டோ கிராஃபர்களிடம் அவ்வப்போது டிப்ஸ் கேட்டு வருகிறார்.
அதேபோல அரசியல் விஷயங்களை தன் தந்தை விஜய டி.ராஜேந்தரின் ஆலோசனை பக்கபலமாக இருக்கிறது என்கிறார் சிம்பு. முன்புபோல தற்போது சிம்பு இல்லை, மற்றவர்களின் ஆலோசனையை ஏற்கிறார் என்பதே பெரிய விஷயம்.
குஷ்பு பேசியதில் ஆபாசம் இல்லை

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக நடிகை குஷ்பு பேட்டியளித்ததில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று அவரது வக்கீல், சுப்ரீம்கோர்ட்டில் வாதிட்டார்.
திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, "இந்தியா டுடே' பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன."இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் நடிகை குஷ்பு, பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்பூவின் வக்கீல் பிங்கி ஆனந்த் கூறுகையில், "திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, "இந்தியா டுடே' பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்' என்றனர்.
Tuesday, January 12, 2010
பூர்ணாவின் புதிய ஏற்பாடு புல்லரிக்கும் தமிழ்சினிமா
ஏழைகளின் ஐஸ்வர்யாராய் என்று பாராட்டு பெறுகிற அளவுக்கு ஐஸ்சின் சாயலில் இருப்பவர் ரியாசென். தாஜ்மஹால் படத்தில் மனோஜுடன் அறிமுகமானது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஏழைகளை தவிக்க விட்டுவிட்டு அவர் இந்திக்கு போய்விட்டார். அவரைப் போலவே இன்னொரு ஏழைகளின் அசின் நம்ம பூர்ணா.
அசின் கால்ஷீட்டுக்கு ஏங்கும் புது இயக்குனர்கள் கூட, பூர்ணாவை எளிதில் அணுக முடிகிறது. அதனாலேயே வரிசையாக படங்கள் வந்து குவிகிறது பூர்ணாவுக்கும். தனது கவர்ச்சி கொள்கையில் கொஞ்சம் திருத்தம் கொண்டு வந்திருக்கிறாராம். லேசாக கவர்ச்சி காட்டிக் கொள்ளலாம், தப்பில்லை என்ற அவரது புதிய ஏற்பாடு கோலிவுட்டில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கதை ஹீரோ ஷான் குமாருடன், அவர் புதிதாக நடிக்கும் கொலை தொழில் படத்தின் புகைப்பட செஷனுக்காக சென்னை வந்திருந்தார் பூர்ணா. இருவரையும் நெருக்கமாக நடிக்க வைக்க நினைத்த பெண் இயக்குனர் விஜய பத்மா, பூர்ணாவிடம் “இன்னும் கொஞ்சம் நெருக்கமா... இன்னும் கொஞ்சம் இறுக்கமா...” என்று சொல்ல சொல்ல அத்தனைக்கும் கீழ் படிந்தார் பூர்ணா. கவர்ச்சி விஷயத்தில் இயக்குனர் எதிர்பார்த்ததை விட தாராளமாக இருந்தாராம். இந்த புது பூர்ணாவை பார்த்தவர்கள் “பொண்ணு பொழச்சுக்கும்” என்று அதிரி புதிரியாக சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.
நில் கவனி என்னை காதலி

ரொம்பவே வித்தியாசமான கதைதான் (?). அப்பாவைக் கொன்றவனையே பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிறா. இதுமாதிரி கதைய இதுவரைக்கும் நீங்க எங்கயாச்சும் கேட்டிருக்கீங்க? சான்சே இல்ல... அந்த அளவுக்கு புதுமையான கதை.
போலீஸ் அதிகாரியையே போட்டுத்தள்ளுகிற பிளாக், காவல்துறையில் இருந்தாலும் கொலைகள் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் லாரா (நமீதா) அப்பாவையும் போட்டுத்தள்ளிடுறான். இதை கண்முன்னே பார்க்கிற லாராவின் தங்கச்சி ஊனமாகிடுறா. பல கொலைகள், வெட்டுக் குத்துன்னு பண்ணிட்டிருக்கிற, பிளாக்கிடம் பாரில் டேன்ஸ் ஆடுற லாராவை தங்களிடம் ஒப்படைத்தால் பல லட்சஙகள் தருவதாக சொல்லிக்கொண்டு 3 பேர் வருகிறார்கள். அவர்களுக்காக, லாராவை கடத்தப் போகும் பிளாக்குக்கு லாராவை பிடித்துப்போகிறது. அவளை அடைந்தே தீரவேண்டும் என்று பிளாக் காய்நகர்த்த, அவளுக்கு இவன்தான் தன் அப்பாவை கொன்றவன் என்று தெரியவர அவனை வெறுக்கிறாள். அவனது தொந்தரவுகள் தொடந்து கொண்டே இருக்க, கடைசியில் அவனை திருமணம் செய்ய சரி என்கிறாள். அவள் சம்மதம் தந்துவிட்ட சந்தோஷத்தில் பிளாக் லாராவை அணைக்க, கத்தியால் அவனைக் குத்திவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள் லாரா.
தங்கையுடன் கேராளவுக்கு வரும் லாரா அங்கு வீடு வாடகைக்கு பிடித்து தங்குகிறாள். ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்கிறாள். அங்கு வரும் கணேஷ் என்பவன் அவளை அடைய முயற்சிக்க அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து அவளை காப்பாற்றுகிறான் போட்டோகிராபர் அமீர் உஸ்மான். அவன் அவளை படம் பிடித்து ஒரு பத்திரிகையில் போட லாராவைத்தேடி வரும் பிளாக்கின் ஆட்கள் கண்ணில் அந்தப் பத்திரிக்கை பட்டுவிடுகிறது. கேரளா வந்து அவளை தேடுகிறார்கள். போட்டோகிராபர் அமீர் பாதுகாப்பில் அவள் இருப்பது தெரிந்து அவளை துரத்துகிறார்கள். இதற்கிடையில அமீர் உடனான நட்பு இருவருக்கும் காதலாக மலர்கிறது. செத்துவிட்டான் என இவ்வளவு நாளும் நினைத்திருந்த பிளாக் உயிருடன் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள் லாரா. பிளாக்கிடம் இருந்து லாராவை காப்பாற்றுவதற்காக அவளை அவனது ஏரியாவிற்கு கூட்டிவருகிறான் அமீர். இங்கும் வந்துவிடுகிற பிளாக் டீம் ஒரு உண்மையை போட்டு உடைக்கிறது.
‘போட்டோகிராபர் அமீர் லாராவை பல லட்சங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், அதிலிருந்து காப்பாற்றவே பிளாக் அவளை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும்’ பிளாக் சொல்கிறான். அமீர் நல்லவன் இல்லை. அவன், பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்பவன் என்னும் உண்மை தெரிவர கடைசியில் பிளாக்குடன் சேர்கிறாள் லாரா.
லாராவாக நமீதா. நமீதா படமாச்சே பூமாதிரி இருக்கும் என்று நினைத்தால் படம் புயல் மாதிரி பக்கா ஆக்ஷன். பல படங்களில் இருந்து பிட்டு பிட்டா எடுத்து சேர்த்து வெச்சமாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும். இடைவேளை வரை என்ன... படம் முழுக்கவே... பிளாக் கேரக்டர் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர். டப்பு டிப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. யார் செத்தாலும் போலீஸ் மட்டும் வரகாணோம். போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்னாலும் கூட ஒரு போலீஸ் கூட பிளாக்கை தேடலை. ஏன் எதற்குன்னு தெரியாமலே சண்டை போடுறாங்க. ப்ளாக் கூடவே வருகிற, அலட்டல் இல்லாத அவரது சகா கௌரி கேரக்டர் சூப்பர். மத்தபடி லாப்டப்பும் கையுமா ஓடுற ரவுடி இவனுங்களாதான் இருப்பானுங்க போலிருக்கு. பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை ஒரு பாட்டை போட்டிட்டே இருக்காங்க. சொதப்பல் ரகம். கதை இல்லாம எதைப் போட்டா என்ன கருமம்... கருமம்... காட்சிகள் எல்லாமே சப்பென்று இருக்கின்றன.
பிளாக்கை குத்தியவுடன் இடைவேளை விடுவதால், ஒருவேளை படம் முடிஞ்சுது போல என்று எண்ணத்தோன்றுகிறது. பெருமாள் என்றொரு கேரக்டரும் இடையில் வருகிறது அவனும் பிளாக்கும் மோதிக் கொள்கிறார்கள். சண்டை காட்சிகளை அதிகநேரம் காட்டுவதால் வெறுப்படிக்கிறது (யாருப்பா அந்த எடிட்டர்?) போட்டோகிராபர் அமீர் கேரக்டரை எங்க இருந்து புடிச்சாங்களோ, அவருக்கு யாருங்க வாய்ஸ் கொடுத்தது. டயர்ல இருந்து வால்வ் பிடுங்கின மாதிரி ஒரு வாய்ஸ்... கொடுமைடா சாமி!
நமீதாவை ஜிம்மில் கலாய்க்கும் கணேஷ் கேரக்டரும் அருவை (எங்க இருந்துதான் புடிச்சங்களோ...) பாட்டெல்லாம் தெலுங்கு பாட்டு மாதிரி ஒரே சத்தமா இருக்கு. பிளாக் வரும்போதெல்லாம் அனகோண்டா மியூசிக்கா போட்டு பயமுறுத்துறாங்க. வேற மியூசிக்கே கிடைக்கால போலிருக்கு. மூணு நாலு பேரையே திருப்பித் திருப்பி காட்டுறதால ரொம்பவே போர் அடிக்குது. போட்டோகிராபர் அமீர் வந்த பிறகு படம் கொஞ்சம் சூடு பிடிக்கும்னு பார்த்தா... மறுபடியும் புஸ்ஸுனு ஆயிடுது... நமீதாவையே போட்டு விளம்பரம் பண்ணினதால இது நமீதா படம்னு பார்த்தா ப்ளாக்தான் படம்புள்ளாவரான். பேசாம படத்திற்கு பிளாக்ன்னே வெச்சிருக்கலாம்... கடைசிவரைக்கும் பிளாக் நல்லவனா கெட்டவனான்னு யாராலையும் கண்டே பிடிக்க முடியாது... அப்படி ஒரு கேரக்டர்.
நமீதா கால்ஷீட் கிடைச்சதால வேறு வழியில்லாம இந்த படத்தை எடுத்திருப்பங்க போலிருக்கு.



